/* */

குற்றாலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

குற்றாலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒருவர் தப்பி ஓடினார்.

HIGHLIGHTS

குற்றாலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கி. 

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர், காவல்துறையினரை கண்டதும் ஓட முயன்றுள்ளனர். இதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மற்ற 3 நபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும் 14 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 40), ஆனைக்குட்டி என்ற அருண் (30), சிலம்பரசன் (35)என்பது தெரியவந்தது. உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 பேரையும் கைது செய்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 30 March 2022 11:45 PM GMT

Related News