Begin typing your search above and press return to search.
சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு தென்காசி எம்எல்ஏ உணவு வழங்கினார்
தென்காசியில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மதிய உணவு வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக உணவு இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உணவு வழங்கி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தென்காசி மங்கம்மாள் சாலையின் ஓரங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மதிய உணவு வழங்கினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் வசிப்பதற்கு தேவையான இட வசதிகளை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.