Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆட்டோவில் கயிறு கட்டி இழுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆட்டோவில் கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார் . வட்டார செயலாளர் அயூப்கான் முன்னிலை வகித்தார் .மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . மத்திய அரசு உடனடியாக அதன் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் .