/* */

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது

HIGHLIGHTS

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
X

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் திருவாதிரை திருவிழாவானது கடந்த 10 தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் நாள்தோறும் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

நேற்று திருவாதிரை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இன்று திருவாதிரைத் திருநாளி சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் கோ பூஜையுடன் சிறப்பு அலங்காரம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படும் நடனம் புரியும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நடராஜர் அம்பாளுடன் தனிச் சப்பரத்தில் நடன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை