Begin typing your search above and press return to search.
ஆலங்குளத்தில் 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 21 பேர் கைது
ஆலங்குளத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 21 பேரை கைது செய்து 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.
HIGHLIGHTS
ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 21 பேரை கைது செய்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் ஆலங்குளம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டும் இது வரை மொத்தம் 852 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 24 ஆப் பாட்டில்களும் அதன் மதிப்பு சுமார் 1.15 லட்சம், 13 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.