முதல்வராக பழனிச்சாமிக்கு கடைசி பிரச்சாரம்- முத்தரசன்
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுவே கடைசி தேர்தல் பிரச்சாரம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சிவகங்கை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது,முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்வது இதுவே கடைசி.எடப்பாடி பழனிச்சாமி மனசாட்சியோடு பேச வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும்.அதிமுக கூட்டணி வெற்றியின் மீது நம்பிக்கை இல்லாமல் பணத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளனர்.இதனை தேர்தல் ஆணையம் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனாவை காட்டி தேர்தலை நிறுத்தி விடலாம் என நினைக்கிறார்கள். அதற்கான சாத்தியம் இல்லை. அவ்வாறு செய்தால் இது ஒரு மாபெரும் ஜனநாயக படுகொலை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.