/* */

கார் விபத்து 3 பேர் பலி 8 பேர் காயம்

சிவகங்கை அருகே உழவூரணியில் கார் விபத்து 3 பேர் பலி 8 பேர் காயம்

HIGHLIGHTS

கார் விபத்து 3 பேர் பலி 8 பேர் காயம்
X

மதுரையிலிருந்து மூன்று குடும்பத்தினர் சைலோ காரில் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்து கொண்டு இருந்தனர் காளையார்கோவில் அருகே உழவூரணி என்ற இடத்தில் வளைவில் வேகமாக திரும்பிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து உருண்டு விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்திலேயே மதுரையைச் சேர்ந்த அல்லிராணி(65) சாயல்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் ஒருவர் பலியானர்.

இந்த விபத்தில் சிவா குடும்பத்தினர் தமிழரசி குடும்பத்தினர் என 8 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே காரில் 11 பேர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த போது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 April 2021 5:18 AM GMT

Related News