இருதரப்பு இடையே மோதல் பாதிக்கப்பட்ட மக்களை ஆசை தம்பி சந்தித்து ஆறுதல்
மக்கள் தேசம் கட்சி தலைவர்
HIGHLIGHTS
சிவகங்கை அருகே சாத்தரசன் கோட்டையில் இருதரப்பு இடையே மோதலில் பாதிக்கப்பட்ட மக்களை மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசை தம்பி சந்தித்து ஆறுதல் கூறினார்
சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன்கோட்டை கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி இரவு 11 மணி அளவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமுற்றனர்.
இதில் படுகாயமடைந்த அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ், ஆசீர்வாதம், செல்வம் மற்றும் குருபாதம் ஆகிய நான்கு பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்களை மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசை தம்பி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது மக்கள் தேசம் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ஆசீர்வாதம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.