/* */

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: வெடி வைத்து தகர்ப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு சரிந்து விழுந்த ராட்சத பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

HIGHLIGHTS

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: வெடி வைத்து தகர்ப்பு
X

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு சரிந்து விழுந்த ராட்சத பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கடந்த மாதத்தில் இரண்டுமுறை மண்சரிவு ஏற்பட்டது. மேலும், மற்றொரு பிரதான சாலையான குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 900 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பணியில் அதிகாலை முதல் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

பெரிய அளவிலான பாறை என்பதால் உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் பாறையில் வெடி வைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 30 இடங்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது.

தொடர்ந்து வெடிக்கச் செய்த்ததில் பாறை வெடித்துச் சிதறியது. இதன்காரணமாக ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு சுமார் மூன்று மணி நேரம் வரை தற்காலிமாக தடைவிதிக்கப்பட்டது.

வெடித்துச்சிதறிய பாறை கற்களை பொக்லின் கொண்டு அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. தொடர்மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக பயணிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2021 7:45 AM GMT

Related News