/* */

பெண் டாக்டரிடம் 2ம் நாளாக மருத்துவக்குழுவினர் தொடர்ந்து விசாரணை

Salem News Today: வாழப்பாடியில் உயிரிழந்த சிறுமிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரிடம் 2ம் நாளாக மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

பெண் டாக்டரிடம் 2ம் நாளாக மருத்துவக்குழுவினர் தொடர்ந்து விசாரணை
X

பைல் படம்.

Salem News Today: சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், இந்திராநகரில் வசித்து வரும் உறவினரான இளைஞர் நெருங்கி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார்.

சிறுமியின் பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாழப்பாடியில் உள்ள டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் என்பவரின் தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துசென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், தற்போது 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டது. இந்த கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.

பிரசவத்தின்போது, அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை கண் விழிக்காததால் இறந்து விட்டதாகக் கருதி அங்கிருந்த பிளாஸ்டிக் தொட்டியில் மருத்துவமனையின் பணியாளர்கள் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே குழந்தையை பிரசவித்த பின் சிறுமிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், பெண் டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் திருமணமாகாத 17 வயது சிறுமிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் டாக்டர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீதும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக அந்த டாக்டரிடம் மருத்துவக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதால் திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வாழப்பாடி போலீசார் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அந்த டாக்டருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என்பதை சேலம் மருத்துவக்குழுவினரின் விசாரணை அறிக்கை வந்தபின்னரே முடிவு செய்யப்படும் என வாழப்பாடி போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 9 April 2023 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!