/* */

150 மூட்டை குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் கைது -33 லட்சம் பறிமுதல்

சேலத்தில் 150 மூட்டை குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 33 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

150 மூட்டை குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் கைது  -33 லட்சம் பறிமுதல்
X

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் 150 மூட்டை குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 33 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற பரத்சிங் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மகுடஞ்சாவடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடோனில் பதுக்கி வைத்து சேலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு குட்கா விற்பனை செய்து வந்த பரத்சிங், தீப்சிங், ஓம்சிங், மதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா விற்பனை செய்த தொகை 33 லட்சத்து 5 ஆயிரத்து 850 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய முழு கும்பலையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Updated On: 24 Jun 2021 11:30 AM GMT

Related News