Begin typing your search above and press return to search.
பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்; இருவர் கைது
நெமிலி அடுத்த பணப்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பணப்பாக்கம் அருகே உள்ள கல்பலாம்பட்டு சாலையருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக நெமிலிப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அங்கு விரைந்த நெமிலி போலீஸார், எதிரே வந்தமாடு வண்டிகளை மடக்கி விசாரித்தனர்.
அதில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(62) ரவிக்குமார்(61) இருவரும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திவந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.