/* */

காவேரிப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லை காரணமாக காவேரிப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை

HIGHLIGHTS

காவேரிப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்  தூக்கிட்டு தற்கொலை
X

காவேரிப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பண்ணா முதலித் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(66), அவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு விஷ்ணு ,பரத் என்ற இருமகன்கள் உள்ளனர்.

ராமலிங்கம் அரசுமருத்துவமனையில் மருத்தாளுனராகப் பணியாற்றி ஓய்வுபெற்று,பின்பு தனியார் கல்லூரி ஒன்றில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்தார். மேலும் மூத்தமகன் விஷ்ணு திருமணமாகி மனைவியுடன் பெங்களூரில் தங்கி ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இளையமகன் பரத் ஐடி கம்பெனி ஊழியர், திருமணமாகாமல் கொரோனா காரணமாக வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ராமலிங்கம்அவரது நிலத்தில் மீன்பண்ணை உள்ளிட்ட சிலத் தொழில்களை செய்து வந்ததாகவும் அதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது . ஆனால், ராமலிங்கம் எதிர்பார்த்த அளவிற்கு தொழில் கைகொடுக்கவில்லை என்றும் கடன் தொகையை திரும்பசெலுத்த முடியாமல் அவதியுற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவரிடம் கடன் வழங்கியவர்கள் கொடுத்தப்பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சிலநாட்களாக குடும்பமே அதிக மனஉளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாக ராமலிங்கம், அவர்மனைவி அனுராதா மற்றும் இளையமகன் பரத் ஆகிய மூவரும் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் ,வெகுநேரமாகியும் வீட்டிலிருந்துயாரும் வெளியில் வராததைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்ததில் ராமலிங்கம், அனுராதா மற்றும் பரத் மமூவரும் துக்கில் சடலமாக தொங்கியிருந்தனர். அதனை கண்ட அதிர்ச்சியில் காவேரிப்பாக்கம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே , சம்பவ இடத்திற்கு சென்றப் போலீஸார் மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்தப் போலீஸார்,கணவன், மனைவி,மகன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Updated On: 5 Dec 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’