/* */

காவேரிப்பாக்கத்தில் பைக் திருடிச் சென்றவன் கைது

காவேரிப்பாக்கத்தில் பைக்கைத் திருடிச் சென்றவனை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காவேரிப்பாக்கத்தில் பைக் திருடிச் சென்றவன் கைது
X

காவேரிப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமம் பிராமண தெருவைச் சார்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 31 என்பவர் கடந்த 25. 6. 21 அன்று காஞ்சிபுரம் வேலைக்குச் சென்று தனது இரண்டு சக்கர வாகனம் அப்பாச்சியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு சுமார் 10.30 மணிக்கு காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வாகனம் பழுதாகி நின்று விட்டது அந்த இடத்திலேயே வாகனத்தை லாக் செய்துவிட்டு சென்று மெக்கானிக்கை அழைத்து வந்து பார்த்த போது இரண்டு சக்கர வாகனத்தை காணவில்லை.

இதுசம்பந்தமாக வெங்கடேசன் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வாணி சத்திரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஆற்காடு அண்ணம்பாளையத்தை சேர்ந்த பாலாஜி வயது 21 என்பவர் அப்பாச்சி இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அவரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டபோது முன்னுக்குப் பின்னான பதில் சொன்னதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது கடந்த 25ஆம் தேதி திருடுபோன வெங்கடேசன் என்பவரின் வாகனம் என்பது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 Jun 2021 4:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்