/* */

பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்குவுக்கு பலி

நெமிலியடுத்த பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பனப்பாக்கத்தில் 4 வயது  சிறுமி டெங்குவுக்கு பலி
X

டெங்குவால் உயிரிழந்த சிறுமி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலூக்கா பனப்பாக்கம் கோட்டைத்தெருவைச்சேர்ந்தவர் சீனிவாசன், அரக்கோணத்தில் பிஸ்என்எல் நிறுவன துணைகோட்ட பொறியாளராகவும் அவரது மனைவி பூங்கொடி வணிகவரித்துறையில் டைப்பிஸ்டாகவும் பணியாற்றி வருகின்றனர். தம்பதியினருக்கு, 2பெண்குழந்தைகள் ,அதில், இளைய மகளான ஜீவலதா(4) கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

உடனே, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தும் குணமாகாததால் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்தனர். அங்கும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் சென்னை ,எழும்பூரிலுள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 15த்தேதியன்று அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர்,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்து தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும், சிறுமி ஜீவலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் பனப்பாக்கத்தில் பெரும் சோகத்தையும் பொதுமக்களிடம் டெங்கு பரவல் குறித்த பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Sep 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்