Begin typing your search above and press return to search.
அரசு பஸ் உரசியதில் பைக்கில் சென்றவர் கீழே விழுந்து உயிரிழப்பு
வாலாஜாப்பேட்டை அடுத்த விசிமோட்டூர் அருகே, பைக் மீது அரசு பஸ் உரசியதில், கீழே விழுந்து துணிக்கடை தொழிலாளி பலியாகினார்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை பார்க் அருகே சேர்ந்தவர் குப்புசாமி (32), துணிக்கடை தொழிலாளி. இவர் திருமணாகி, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தாய் மற்றும் சகோரிகளுடன் வசித்து வந்த குப்புசாமி, வேலூரில் உள்ளத் துணிக்கடை ஒன்றில் வேலைசெய்து வந்த்தார். தினசரி வேலைக்கு பைக்கில் சென்று வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு மாலை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், வாலாஜா அடுத்த விசிமோட்டூர் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தார். அவரை முந்திச்சென்ற அரசு பஸ், பைக் மீது உரசியது. அதில். நிலைத்தடுமாறி கீழே விழுந்த குப்புசாமி, தலையில் பலத்த காயமடைந்து. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த வாலாஜா போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.