/* */

விரைவில் சுற்றுலா தலமாக மாறும் ராணிபேட்டை பிஞ்சி ஏரி

ராணிப்பேட்டை நகர மையத்தில் உள்ள பிஞ்சி ஏரி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது என்று அமைச்சர் காந்தி கூறினார்

HIGHLIGHTS

விரைவில் சுற்றுலா தலமாக மாறும்  ராணிபேட்டை பிஞ்சி ஏரி
X

பிஞ்சி ஏரியை சுற்றுலா தலமாக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ராணிப்பேட்டை முத்துக்கடையில் 15 ஏக்கர் பரப்பளவில் பிஞ்சி ஏரி இருக்கிறது. இந்த ஏரியின் கீழ் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இருந்தது. தற்போது அவை அனைத்தும் வீட்டு மனைகளாகி விட்டன.

ஏரியும் புதர்மண்டி, கழிவுநீர் தேக்கமாக காட்சியளிக்கிறது. ஏரியில் குப்பை கொட்டி எரிக்கின்றனர். ஏரியை சுற்றி ஆக்கி ரமிப்புகளும் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியை சீர மைத்து பூங்கா அமைக்க வேண்டும்.நல்லநீர் தேக்கி படகு குழாம் அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் எம்பியுமான ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூரெடுக்க வேண்டும். ஏரிக் கரையை பலப்படுத்தி நடை பாதை அமைக்க வேண்டும். மரக்கன்றுகள் நட வேண்டும். ஏரிக்கு மத்தியில் தீவு அமைப்பது, ஏரியில் நீர் தேக்கி படகு குழாம் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு படகு சவாரி இயக்குவது போன்ற பல திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடந்தது.

இதில் மாநில திமுக சுற்றுச்சூழல் அணிதுணைச் செயலாளர் வினோத்காந்தி, ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகராட்சி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முத்துக்கடை பகுதி ஒரு முன்மாதிரியான சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய பொழுதுபோக்கு, சுற்றுலாதலமாக அமையும்

Updated On: 6 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  3. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  5. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  6. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  7. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  9. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...