/* */

லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி பொறியாளர் முன்ஜாமீன் கோரி மனு

இராணிப்பேட்டை நகராட்சிப் பொறியாளர் லஞ்சவழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

HIGHLIGHTS

லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி பொறியாளர் முன்ஜாமீன் கோரி மனு
X

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார்

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். ராணிப்பேட்டையை அடுத்த லாலாபேட்டையில் உள்ள அவரது வீட்டில், லஞ்சஒழிப்புப் போலீஸார், கடந்த 6ஆம் தேதி சுமார் 15 மணி நேரம் சோதனை செய்தனர்

சோதனையில் ரூ 23.5 லட்சம் ரொக்கம், ரூ,10.75 லட்சம் வரைவோலை ஆகிய கணக்கில் வராதவைகள் மற்றும் , 193 சவரன் தங்க நகை, 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்பு, லஞ்ச ஒழிப்பு போலீஸார், பொறியாளர் செல்வகுமார் , அவர் மனைவி சிவசங்கரி ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரின் 9 வங்கி கணக்குகளை முடக்கி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்குத்தொடர்பாக செல்வகுமார் ,முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Updated On: 21 Dec 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’