Begin typing your search above and press return to search.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகதேர்தல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடக்க உள்ளது.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், வாலாஜாப்பேட்டை மற்றும் திமிரி ஆகிய 7 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், 13 மாவட்ட கவுன்சிலர்கள்,127 ஒன்றிய கவுன்சிலர்கள், 288ஊராட்சி தலைவர்கள், 2220 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் நேற்று முன்தினம் உறுப்பினர்கள் தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத்தலைவர், 7 ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர்கள் 288 ஊராட்சி மன்றங்களின் துணைத்தலைவர் ஆகிய பதிவுகளுக்கு தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.