Begin typing your search above and press return to search.
தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக அகற்றப்படாத இரும்பு தடுப்பு வேலி
ஆற்காடு அடுத்த விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக விழுந்து கிடக்கும் இரும்பு தடுப்பு வேலியை அப்புறப்படுத்த கோரிக்கை
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த கீழ்விஷாரம் பகுதி வேலுர்-சென்னை பைபாஸ் சாலையில் கடந்த 2நாட்களுக்கு முன்பு அடித்த காற்று மழையில் சர்வீஸ் சாலைக்கும் நெடுச்சாலைக்கும் இடையே பொருத்தியுள்ள இரும்பு தடுப்பு வேலி உடைந்து நெடுஞ்சாலையில் விழுந்து கிடக்கிறது .
இதனால் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பதற்றமடைந்து, பின்னர் சமாளித்து செல்கின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழலும் உருவாகின்றது .
எனவே,பொதுமக்கள் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்தும் அப்புறப்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர. இதனால் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி, உயரதிகாரிகளுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்..