/* */

வாகனங்களில் சென்று கொரோனா தடுப்பூசி: கலெக்டர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்திட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அதில் தலைமையேற்று பேசிய கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் பேசியதாவது;

இராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ள ஒவ்வொரு குறுவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்கள் ஆகியவற்றிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்ளுடன் நேரடியாக நடமாடும் தடுப்பூசிமுகாம்களை நடத்தி ,அந்தந்த வட்டாட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதில் நடைபாதை வியாபாரிகள், சில்லரைக்கடைவியாபாரிகள், பெரிய வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர்களில் தடுப்பூசிப் போடாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசிப்போட வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் உடல் நிலைக்குறித்து பரிசோதனை செய்த பிறகே தடுப்பூசி போட வேண்டும். உடல் உபாதைகள், தீராத நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே தடுப்பூசி போடவேண்டும்.

மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நடமாடும் முகாம் மூலமாக பணியிடங்களுக்குச் சென்று தடுப்பூசி போடவேண்டும். அவற்றை வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாடசியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர், தொழிலாளர்துறை இணை ஆணையாளர் ஆகியோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கூறினார்.

கூட்டத்தின் போது,மாவட்ட வருவாய் அலுவலர்,ஜெயச்சந்திரன்,சுகாதாரப்பணிகள் துணைஇயக்குநர் மணிமாறன்,மற்றும் அனைத்து துறைஅதிகாரிகள் உடனிருந்தனர்..

Updated On: 29 Sep 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்