/* */

மாடு மீது கார் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

ஆற்காட்டில் மிரண்டு ஓடிய மாடு மீது மோதிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

மாடு மீது கார் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
X

ஆற்காட்டில் மாடு மீது மோதி நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.

ஆற்காட்டில் மிரண்டு ஓடிய மாடு மீது மோதிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காலை வரதராஜ பெருமாள் கோயிலருகே செய்யாறு சாலையில் படுத்திருந்த மாடு ஒன்று திடிரென எழுந்து மிரண்டு ஓடியது. அப்போது எதிரே வந்த கார் மாடுமீது மோதி நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து அங்கு வந்த ஆற்காடு போலீஸார். காருக்குள்ளிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டிவந்தது திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பசும்பொன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருவதாக தெரிய வந்தது.

மேலும் பெங்களூருக்கு போகும்போது விபத்து நடந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் சாலையின் குறுக்கே கரப்பான் பூச்சி போல கவிழ்ந்திருந்த காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும், அடிக்கடி கால்நடைகளால் ஏற்படும் இது போன்று நடக்கும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .


Updated On: 10 Sep 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’