/* */

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரக்கோணம் அடுத்த வேடலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

செல்போன் திருட்டு (கார்ட்டூன் படம் )

அரக்கோணம் அடுத்த வேடலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வேடல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (47). சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 11 சவரன் நகை மற்றும் ரூபாய் ஏழாயிரம் கொள்ளையடித்து சென்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, தனலட்சுமி அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து, தடயங்ஙளை சேகரித்து சென்றனர். இதனையடுத்து போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...