/* */

தொடர்மழையால் திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு

தொடர் மழை காரணமாக திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது. கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு.

HIGHLIGHTS

தொடர்மழையால் திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு
X

திருவாடானை தொகுதி தொடர் மழை காரணமாக திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது. கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ் மங்கலம், நகரிகாத்தான், தொம்மையாபுரம், ஓரியூர், திருப்புனவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதி கண்மாய், குளங்கள், வயல் வெளிகள் மற்றும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

கனமழை காரணமாக, மணிமுத்தாறு ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் திருவாடானையில் இருந்து நகரிகாத்தான், தொம்மையாபுரம் வழியாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் கிராமங்களுக்குச் செல்லும் தரைப்பாலத்தை தண்ணீா் மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல திருப்புனவாசல் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதன் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் அதில் நீச்சலடித்து குளித்து வருகிறனர். பல ஆண்டுகளாக தரைப்பாலத்தை அகற்றி மேம்பாலம் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் எவ்விதப் பயனும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 29 Nov 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...