இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40லட்சம் மதிப்பிலான கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்.
HIGHLIGHTS
இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார், மற்றும் மண்டபம் வனத்துறையினர் கூட்டாக அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வேதாளை தெற்கு தெருவில் சதாம் எனபவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ வீதம் 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், தலா 30 கிலோ வீதம் 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சதாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.40 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கைக்கு இன்றிரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.