Begin typing your search above and press return to search.
இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கன மழை
இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நள்ளிரவு வெளுத்து வாங்கிய கன மழையால் சாலையில் மழை நீர் தேங்கியது.
HIGHLIGHTS
தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இராமேஸ்வரம், தனுஸ்கோடி பகுதிகளில் நள்ளிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள மழை நீரால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க இராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.