இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்
கடந்த 8ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
HIGHLIGHTS
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படாததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதையடுத்து மீனவர்கள் தங்களுடைய படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று மீன்வளத்துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்து 5 நாட்கள் கழித்து இராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு டீசல், குடிநீர், ஐஸ்கட்டி உள்ளிட்ட பொருட்களை தங்களது படகுகளில் ஏற்றிக்கொண்டு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.