/* */

இராமேஸ்வரம் அருகே மீன் வண்டி டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து

மீன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் அருகே மீன் வண்டி டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து
X

மீன் ஏற்றி சென்ற மீன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டது.

மீன் ஏற்றி சென்ற மீன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் இருவரும் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேர்ந்தவர் மீன் வியாபாரி சண்முகம். இவர் வெளியூரில் ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றை வாங்கி மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்ள வேர்கோடு பகுதியில் உள்ள மீன் கம்பெனிகளுக்கும், இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தேவையான ஐஸ் பொருட்களை ஏற்றி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே இருசக்கர வாகனம் ஒன்று அதே போல் அதி வேகமாக சரக்கு வாகனத்தை நோக்கி வேகமாக வருவதை கண்ட சரக்கு வாகன ஓட்டுநர் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டுனர் வாகனத்தை திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் அருகே இருந்த டிரான்ஸபார்மர் மீது மோதியது. இதில் டிரைவர் காயம் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் சிகிகச்சைக்காக இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வேர்கோடு, கரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் மின் இணைப்பு இல்லாததால் இந்த விபத்தின் போது இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து துறைமுக காவல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்