பெட்ரோல்,டீசல்,கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இராமநாதபுரத்தில் கேஸ்சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் மத்திய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
இராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அரண்மனை முன்பாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் கார்குடி சேகர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் பினுலால் சிங் கலந்து கொண்டார். மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல்கேஸ் விலை உயர்த்தியதால் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல்கேஸ் விலையை குறைக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.