Begin typing your search above and press return to search.
பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய வழக்குகளில், கஞ்சா மற்றும் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக வேப்பங்குளம் கிராம தவமணி, மதுரை மேலூர் கடுகுமுனிச்சாமி, கீழதூவல் கிராம ராதா என்ற ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மாவட்ட எஸ்பி கார்த்திக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் 3 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே 3 பேரும் சிறையில் உள்ளனர்.