வாட்ஸ்-அப்பில் தாேழிகளுக்குள் பகிர்ந்த படங்கள்: வாலிபரின் கையில் சிக்கிய சுவாரஸ்யம்
தோழிதான் என நினைத்து, படங்களை அனுப்பி பெண்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் இராமநாதபுரம் போலீசில் வாலிபர் சிக்கிய சுவராஸ்யம்.
HIGHLIGHTS
இராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு, அவருடைய தோழி அனுப்புவது போல் வாட்ஸ்-அப்பில் வாலிபர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். அந்த பெண்ணின் மூலம் அவருடைய மற்ற தோழிகளின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்ட நபர், அவர்களிடமும் தோழிகள் அனுப்புவது போல இரவு நேரங்களில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டார். அப்போது சில பெண்கள் தங்களின் குடும்ப கஷ்டங்கள், அந்தரங்க பிரச்சினைகளை வாட்ஸ்-அப் தகவல்களாக தோழி என நினைத்து அந்த நபரிடம் பகிர்ந்துள்ளனர். மேலும் அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
'மிரட்ட தொடங்கிய நபர்' :
தொடர்ந்து தோழியாக பேசி வந்த நிலையில், அந்த நபர் ஒரு பெண்ணிடம் பேசும்போது திருமணமாகி விட்டதா? என்று தகவல் அனுப்பி உள்ளார். ஒரே தெருவில் இருக்கிறோம் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது உனக்கு தெரியாதா? என்று அந்த பெண் பதில் அனுப்பி கேட்ட அந்த பெண் உஷார் அடைந்து, தோழி பெயரில் வரும் வாட்ஸ்-அப் தகவல்கள் குறித்து விசாரிக்க தொடங்கினார். உடனே எந்த தோழி பெயரில் தகவல் வந்ததோ, அவரை தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர் பெயரில் வந்த வாட்ஸ்-அப் தகவல்களையும் காண்பித்துள்ளார்.
மேலும் தனது மற்ற தோழிகளையும் உஷார்படுத்தி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பெண் பழகுவது போல் ராமநாதபுரம் பெண்களிடம் தகவல் அனுப்பி பழகியவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்ராவ் (35) என தெரியவந்தது. தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து உஷாரான பீம்ராவ் செல்போனில் உள்ள தகவல்களை அழித்துள்ளார். மேலும் யாருக்கெல்லாம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி இருந்தாரோ, அந்த, பெண்களை தொடர்பு கொண்டு போலீசுக்கு சென்றால், சேகரித்து வைத்துள்ள உங்களின் அந்தரங்க, ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
'சிக்கிய பீம்ராவ்'
இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் செங்கம் பகுதிக்கு விரைந்து சென்று பீம்ராவை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு திருமணமாகி முதல் மனைவி திவ்யா பிரிந்து சென்ற நிலையில் 2-வதாக ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கைது பீம்ராவை இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.