/* */

வாட்ஸ்-அப்பில் தாேழிகளுக்குள் பகிர்ந்த படங்கள்: வாலிபரின் கையில் சிக்கிய சுவாரஸ்யம்

தோழிதான் என நினைத்து, படங்களை அனுப்பி பெண்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் இராமநாதபுரம் போலீசில் வாலிபர் சிக்கிய சுவராஸ்யம்.

HIGHLIGHTS

வாட்ஸ்-அப்பில் தாேழிகளுக்குள் பகிர்ந்த படங்கள்: வாலிபரின் கையில் சிக்கிய சுவாரஸ்யம்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்ராவ் (35).

தோழிக்கு அனுப்புவதாக நினைத்து அந்தரங்க தகவல்கள், படங்களை அனுப்பி ஏமாந்த பெண்கள். பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களது தோழியாக ஆண் ஒருவர் பழகி, அவர்களது அந்தரங்க தகவல்களை சேகரித்தது எப்படி?

இராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு, அவருடைய தோழி அனுப்புவது போல் வாட்ஸ்-அப்பில் வாலிபர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். அந்த பெண்ணின் மூலம் அவருடைய மற்ற தோழிகளின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்ட நபர், அவர்களிடமும் தோழிகள் அனுப்புவது போல இரவு நேரங்களில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டார். அப்போது சில பெண்கள் தங்களின் குடும்ப கஷ்டங்கள், அந்தரங்க பிரச்சினைகளை வாட்ஸ்-அப் தகவல்களாக தோழி என நினைத்து அந்த நபரிடம் பகிர்ந்துள்ளனர். மேலும் அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

'மிரட்ட தொடங்கிய நபர்' :

தொடர்ந்து தோழியாக பேசி வந்த நிலையில், அந்த நபர் ஒரு பெண்ணிடம் பேசும்போது திருமணமாகி விட்டதா? என்று தகவல் அனுப்பி உள்ளார். ஒரே தெருவில் இருக்கிறோம் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது உனக்கு தெரியாதா? என்று அந்த பெண் பதில் அனுப்பி கேட்ட அந்த பெண் உஷார் அடைந்து, தோழி பெயரில் வரும் வாட்ஸ்-அப் தகவல்கள் குறித்து விசாரிக்க தொடங்கினார். உடனே எந்த தோழி பெயரில் தகவல் வந்ததோ, அவரை தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர் பெயரில் வந்த வாட்ஸ்-அப் தகவல்களையும் காண்பித்துள்ளார்.

மேலும் தனது மற்ற தோழிகளையும் உஷார்படுத்தி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பெண் பழகுவது போல் ராமநாதபுரம் பெண்களிடம் தகவல் அனுப்பி பழகியவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்ராவ் (35) என தெரியவந்தது. தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து உஷாரான பீம்ராவ் செல்போனில் உள்ள தகவல்களை அழித்துள்ளார். மேலும் யாருக்கெல்லாம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி இருந்தாரோ, அந்த, பெண்களை தொடர்பு கொண்டு போலீசுக்கு சென்றால், சேகரித்து வைத்துள்ள உங்களின் அந்தரங்க, ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

'சிக்கிய பீம்ராவ்'

இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் செங்கம் பகுதிக்கு விரைந்து சென்று பீம்ராவை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு திருமணமாகி முதல் மனைவி திவ்யா பிரிந்து சென்ற நிலையில் 2-வதாக ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கைது பீம்ராவை இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Aug 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...