/* */

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

முதுகுளத்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 66 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல்
X

முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதும் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவரின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்யபோது, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.66 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணையில் செல்லப்பாண்டியன் என்பவர் ஆடுகளை விற்று அந்த பணத்தை கொண்டு சென்றதாக தெரியவந்தது.

Updated On: 2 Feb 2022 4:12 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!