புதுக்கோட்டையில் டூவிலர் திருடன் கைது: 14 வாகனங்கள் பறிமுதல்
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனங்களை திருடிய பலே ஆசாமி கைது 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடப்பட்டு வந்தன. குறிப்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் அதிக அளவு மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.
இது குறித்து, இருசக்கர வாகன உரிமையாளர்கள் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்திபன் உத்தரவின் பேரில், கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில் தனிப்படையினர் மர்ம நபர்ரை தேடிவந்தனர்.
அப்போது கீரனூர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரை விசாரணை செய்ததில், அவர் கீரனூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் வயது 30 என்பதும், கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்களை அவர்தான் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்ம் சமீபகாலமாக அவர் திருடிய 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்த நீதிமன்ற உத்தரவை பெற்று உரிமையாளர்களிடம் இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.