/* */

மே 31 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு முகாம்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31 -ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடக்கிறது

HIGHLIGHTS

மே 31 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022 நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 26 May 2022 3:30 AM GMT

Related News