/* */

புதுக்கோட்டையில் அரசு விதிமுறைப்படி திறக்கப்பட்ட டீக்கடை மற்றும் சலூன் கடைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் விதிமுறைகள் படி இன்று டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில்  அரசு விதிமுறைப்படி திறக்கப்பட்ட டீக்கடை மற்றும் சலூன் கடைகள்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் அரசின் விதிமுறைகள் படி செயல்பட துவங்கிய டீக்கடைகள் மற்றும சலூன் கடைகள்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேனீர் கடைகள் சலூன் கடைகள் உள்ளிட்டவைகள் இயங்குவதற்கு தடை விதித்திருந்தது

இந்நிலையில் இன்று 14ஆம் தேதி முதல் சலூன் கடை டீக்கடை உள்ளிட்ட அனைத்தும் இயங்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

அதன்படி இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டீ கடைகள் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டு இயங்குகிறது.

ஒரு மாதத்திற்கு அப்புறம் மீண்டும் டீ கடை சலூன் கடை திறக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்று டீ கடை சலூன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் சலூன் கடை மற்றும் டீக்கடைகளில் முறையாக கடைபிடிப்போம் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்


Updated On: 14 Jun 2021 4:15 AM GMT

Related News