/* */

புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு

புதுக்கோட்டையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு
X

புதுக்கோட்டை, புது குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கு, தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில், 5க்கும் மேற்பட்ட இடங்களில், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வீட்டு வாசல் முன்பாக, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, இன்று மாலை அனைத்து சிலைகளும், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தி, குளத்தில் கரைக்கப்பட்டன.

அப்போது, இந்து முன்னணி அமைப்பினர் ஜெய்காளி ஓம்காளி என்று கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பின்னர் கரைக்கப்பட்டன.

Updated On: 10 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்