புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி வித்யாபீடத்தில் மஹா சரஸ்வதி பூஜை
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாபீடத்தில் மஹா சரஸ்வதி பூஜை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாபீடத்தில் மஹா சரஸ்வதி பூஜை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாபீடத்தில் நவராத்திரியின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக மஹா சரஸ்வதி பூஜை முன்னிட்டு விசேஷ பூஜைகள், ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் மஹா சரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை முதல் நடைபெற்ற ஹம்ஸவாகீஸ்வரி மந்த்ர பல்லவ மேதாஸூக்த ஹோமத்தின் பூர்ணாஹுதியும், பூஜ்யஸ்ரீ பிரணவாநந்த மஹாஸ்வாமிகளின் அருளாசியுடனும், ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்காதேவிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற பிரணவாநந்த மஹாஸ்வாமி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசுகையில், ஸ்ரீ சரஸ்வதியின் பேரருளால், அனைவரும் கல்வியில் ஆர்வம் குறையாமல், நல்ல ஞாபக சக்தியுடனும், நேர்மையுடனும் பெரியவர்கள் சொல்கேட்டும், சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகவும் செய்யப்பட்ட இன்றைய பூஜைகளும், ஹோமமும் நற்பலன்கள் அனைத்தையும் வழங்கும்புதிய கல்ஹார திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதையும், அதற்கு அன்பர்கள் உதவிகளை செய்து, திருப்பணியில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.