/* */

தனது இரண்டு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையை விட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்

HIGHLIGHTS

தனது இரண்டு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
X

தனது இரண்டு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை தீபன் ராஜ் .

புதுக்கோட்டையில் தான் பெற்ற இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் தீபன் ராஜ்(40.). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டிற்கு மனைவி சென்றுவிட்டார். இவர்களுடைய இரண்டு வயது பெண் குழந்தை தந்தை தீபன் ராஜ் உடன் இருந்து வந்தது.

இந்நிலையில் தீபன் ராஜ் தான் பெற்ற இரண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறதுகடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிற்கு வந்தபோது சிறுமி தாயிடம் தந்தையின் அத்துமீறல் குறித்து தனது மழலை குரலில் தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தீபன் ராஜ்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Oct 2021 11:15 PM GMT

Related News