/* */

பெரம்பலூர்: நம்பிக்கை மையத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டம் நம்பிக்கை மையத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: நம்பிக்கை மையத்தில் உலக எய்ட்ஸ் தின  உறுதிமொழி ஏற்பு
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் நம்பிக்கை மையத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் தின  உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் நம்பிக்கை மையத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் 2021 ஆண்டுக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மருத்துவ அலுவலர் பாரதி பிரியா வழிகாட்டுதலின் படி அனைத்து பணியாளர்களும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கௌஷிக் ராஜசேகர் ,மருத்துவர் சுரேஷ்குமார் ,மனநல மருத்துவர் வினோத், சித்த மருத்துவர் மணிமேகலை முன்னிலை வகித்தனர்.ஆய்வக நுட்புனர் ஜஸ்டின் தினகரன் வரவேற்புரையாற்றினார்.

எச்ஐவி பாதித்த நோயாளிகளுக்கு சம உரிமை அளிப்பேன் என உளமாற உறுதியளிக்கிறேன் என்கிற உறுதிமொழியை செவிலியர் கண்காணிப்பாளர் மாதேஸ்வரி, செவிலியர்கள் பொன்மணி, தமிழ்செல்வி, ரேணுகா தேவி, புவனா ,ஆய்வக நுட்புனர் விஜயா, மற்றும் பொதுமக்களும் மருத்துவமனை பணியாளர்களும் உளமாற ஏற்று கொண்டனர்.

நிகழ்வின் முடிவில் ஆற்றுப்படுத்துனர் பழனிவேல்ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 2 Dec 2021 2:51 AM GMT

Related News