Begin typing your search above and press return to search.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
900 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் 900 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 16 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.