Begin typing your search above and press return to search.
போக்சோ வழக்கில் கைதான பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம்
குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா செல்வராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் (19), த/பெ வவசி, கன்னியப்பன் தெரு, கீழவாசல், ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம். என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
மேற்படி பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் செல்வராணி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி பெரிதும் பாராட்டினார்.