/* */

மது விலக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார் திடீர் மாயம்

மது விலக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காரை கடத்திச் சென்ற உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மது விலக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார் திடீர் மாயம்
X

பெரம்பலூர் காவல் நிலையத்தில் மாயமான கார்.

பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாகன தணிக்கையின் போது பாண்டிச்சேரி மதுப் பாட்டில்களை கடத்தி வந்தததாக மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர் புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மெய்யப்பனின் காரை பறிமுதல் செய்து பெரம்பலூர் மதுவிலக்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நேற்று காணாமல் போனது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி கொடுத்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கார் உரிமையாளர் மெய்யப்பனே புதுக்கோட்டைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து காரை பறிமுதல் செய்து கார் உரிமையாளர் மெய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 7 Sep 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...