/* */

அன்னமங்கலத்தில் தொடர் மின்வெட்டு, பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

அன்னமங்கலத்தில் தொடர் மின்வெட்டு, பொதுமக்கள் அவதி
X

அன்னமங்கலம் கிராமத்தில் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது சர்வ சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது.கடந்த மாதம் தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இனி தமிழகத்தில் மின்வெட்டு என்பற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்து வந்த நிலையில், இக்கிராமத்தில் மின்வெட்டு என்பது சாதாரண நிகழ்வாக உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக பகலில் மட்டும் நடந்து வந்த மின்வெட்டு. தற்போது நள்ளிரவில் தொடர்வதால் தூக்கத்தை தொலைத்தனர்.

இப்பகுதியினர் இரவிலும் இப்படி மின்வெட்டு தொடர்வதால் கோடை அனலின் தாக்கம் இரவில் வாட்டி வதக்கி வரும் நிலையில் மின்சாரம் இன்றி இப்பகுதி முதியவர்களும் குழந்தைகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

மேலும் இக்கிராமத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம் வழக்கமாக கோடையில் வெப்பம் பழிவாங்கும் நிகழ்வை காட்டிலும் மின்சாரம் இப்படி நேரகாலம் தெரியாமல் தடைபட்டு வருவதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச முடியாமல் பழிவாங்க படுவதாகவும் விவசாயிகள் தெவித்தனர்.

இந்த பகுதியில் ஏற்கனவே திருடர் பயத்தில் உறைந்துள்ள கிராம மக்கள், இது போன்று நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்களால் மிகுந்த அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

மின்வெட்டுக்கான காரணம் முறையாக தெரிவிக்கப்படாமல் அதிகாரிகள் இருந்து வருகின்றனர். நள்ளிரவில் இக்கிராம மக்கள் படும் இன்னல்களை எண்ணிப்பார்த்து, மின்வெட்டு நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இக்கிராம மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Updated On: 22 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்