Begin typing your search above and press return to search.
பெரம்பலூர்: குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை
பெரம்பலூர் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
பெரம்பலூரில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வடக்கு மாதவி ரோடு அனுக்கூர் குடிக்காடு கிராமத்தில் 9வது வார்டு குறுக்குத் தெரு பகுதியில் 30 குடும்பங்கள் மேல் வசித்து வருகின்றனர்.
மழை தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது வரை மழைநீர் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் வருவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பாம்பு, பூச்சிகள் வீட்டிற்குள் வருவதால் பெரிதும் இப் பகுதியில் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.