Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு கலெக்டர் அஞ்சலி
முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் இன்று பெரம்பலூரில் தகனம் செய்யப்படுகிறது. கலெக்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
HIGHLIGHTS
திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி நேற்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அவரது சொந்த ஊரானா சத்திரமனை வேலூரில் உடல் தகனம் நடைபெறுகிறது. த்றபோது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு உறவினர்களும் பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளார்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிசாபார்த்திபன் ஆகியோர் உயிரிழந்த அமைச்சரின் மனைவியின் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Heading
Content Area