/* */

இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அல்லிநகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதான மணிகண்டன் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரண்டை கொலை சம்மந்தமாக குன்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மணிகண்டன் (22), த/பெ மருதமுத்து, காலணி தெரு, மேல உசேன் நகரம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 23 Aug 2021 5:25 PM GMT

Related News