உறவினர் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, மர்ம நபர்கள் கைவரிசை
பெரம்பலூர் அருகே உறவினர் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் , கொளக்காநத்தம் கிராமத்தில் இன்று அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி ஜோதி ( 40 ) இவர் , தற்போது சென்னையில் டீக்கடை வைத்து அங்கேயே குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
தனது உறவுக்காரரான செல்வகுமார் என்பவரின் திருமணத்திற்காக ஊருக்கு வந்தவர் இன்று மாலை கொளக்காநத்தம் - அணைப்பாடி சாலையில் உள்ள சமுதாய கூடம் அருகே பெண் அழைப்புக்காக கொளப்பாடி செல்ல ஏற்பாடு செய்து நின்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் படிக்கட்டில் ஏற முயற்சித்த போது ,
பின்னால் கருப்பு நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்களில் வந்து பின்னால் உட்கார்ந்து இருந்தவன் , ஜோதியின் கழுத்தில் இருந்த சுமார் ஐந்தே - கால் பவுன் மதிப்புள்ள இரண்டு செயின்களை பறித்து கொண்டு அணைப்பாடி நோக்கி தப்பி சென்று மின்னலாய் மறைந்தனர் . இது குறித்த புகாரின் பேரில் ,
மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .