/* */

உறவினர் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, மர்ம நபர்கள் கைவரிசை

பெரம்பலூர் அருகே உறவினர் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

உறவினர் திருமணத்திற்கு  வந்த பெண்ணிடம்  நகை பறிப்பு, மர்ம நபர்கள் கைவரிசை
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டம் , கொளக்காநத்தம் கிராமத்தில் இன்று அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி ஜோதி ( 40 ) இவர் , தற்போது சென்னையில் டீக்கடை வைத்து அங்கேயே குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

தனது உறவுக்காரரான செல்வகுமார் என்பவரின் திருமணத்திற்காக ஊருக்கு வந்தவர் இன்று மாலை கொளக்காநத்தம் - அணைப்பாடி சாலையில் உள்ள சமுதாய கூடம் அருகே பெண் அழைப்புக்காக கொளப்பாடி செல்ல ஏற்பாடு செய்து நின்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் படிக்கட்டில் ஏற முயற்சித்த போது ,

பின்னால் கருப்பு நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்களில் வந்து பின்னால் உட்கார்ந்து இருந்தவன் , ஜோதியின் கழுத்தில் இருந்த சுமார் ஐந்தே - கால் பவுன் மதிப்புள்ள இரண்டு செயின்களை பறித்து கொண்டு அணைப்பாடி நோக்கி தப்பி சென்று மின்னலாய் மறைந்தனர் . இது குறித்த புகாரின் பேரில் ,

மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Updated On: 8 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...