பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் அதிவேகமாக மூன்றாவது அலையாக உருவெடுத்து வரும் ஒமிக்ரான் நோய்தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள் பொது போக்குவரத்து காய்கறி அங்காடிகள் 100% அடைக்கப்பட்டது..
மருத்துவம் பால் வினியோகம் பேப்பர் விநியோகம் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டும் இயங்கியது. ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்..இந்த முழு நேர ஊரடங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 150க்கும் மேற்றபட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்..இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பொது மக்களின் மருத்துவத் தேவைக்காக மருந்தகங்கள் திறந்திருந்தது.இருசக்கர வாகனம் கார்களில் தேவையின்றி சுற்றுபவர்களை காவல்துறையினர் வாகன எண்களை பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர் மீண்டும் தேவையின்றி சுற்றி திரிந்தாள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.