/* */

நிறைமாத கர்ப்பிணி பெண் மாயம்: காவல்நிலையத்தில் தாய் புகார்

பத்மாவின் செல்போனையும் காணவில்லை, பின்னர் பத்மாவையும் காணவில்லை பெரும் பரபரப்பு

HIGHLIGHTS

நிறைமாத கர்ப்பிணி பெண் மாயம்: காவல்நிலையத்தில் தாய் புகார்
X

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆலத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். டிரைவர். இவரது மனைவி பத்மா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான பத்மா தற்போது ஆலத்தூர் தெற்கு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பத்மாவை, அவரது தாய் கோவிந்தம்மாள் பரிசோதனைக்காக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பின்னர் பரிசோதனை முடிந்து மாலையில் ஊருக்கு செல்வதற்காக அவர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது பத்மாவின் செல்போனை காணவில்லை. இதனால் செல்போனை கோவிந்தம்மாள் தேடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பத்மாவையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள், பத்மாவை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாணை நடத்தி பத்மாவை தேடி வருகின்றனர். காணாமல்போன நிறைமாத கர்ப்பிணி பத்மாவுக்கு நேற்று முன்தினம் தான் பிரசவ தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Aug 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  3. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  4. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  6. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  7. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  10. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...