Begin typing your search above and press return to search.
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் நோக்கில் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் உள்ள இடங்களில் கூடும் பெண்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறை நிலைய கோட்ட அலுவலர் அம்பிகா, தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் வழங்கினர்.